அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஆபீஸ் கான்டீன்

காலைல ஏழு மணிக்கு  ஆரம்பிச்சு  சாய்ங்காலம் அஞ்சு மணி வரைக்கும்  எங்களோட  வேலை  நேரம். இடைல பிரேக் ன்னு சொல்லிக்கொள்ள அப்படி ஒன்னும் இல்லை என்றாலும், தொழுகை நேரத்திற்கு மட்டும் எந்த அனுமதியும் பெறாமல் போய் வர எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பகல் சாப்பாட்டுக்கு படும் பாடு சொல்லி மாளாது.

சீட்டில் இருந்தபடியே  keyboarda  லேசா நகர்த்தி வச்சுட்டு  அங்கேயே  இருந்துதான்  சாப்பிடணும். (ம்ம்ம் Lunch பிரேக் உள்ளவர்களெல்லாம் குடுத்து வச்சவங்க)  ஊர்ல எப்புடியெல்லாம் ராசாமாரி  இருந்தோம், எப்படியெல்லாம் அதிகாரம் செலுத்துனோம்  இப்போ இப்புடி வந்து கஷ்டபடுரோமேனு  எத்தனையோ பேர் (இங்கு family இல்லாதவர்கள்) சொல்லுவதை டெய்லி  கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், இதற்காகவே எங்கள் office இருக்கும்  பில்டிங்கில் பனிரண்டாவது மாடியில் ஒரு ஹோட்டல் திறக்க அனுமதி கொடுத்திருந்தார்கள், ஆனால் அதுவும் நிலைக்கலை. அங்கு செய்யும் சமையல் வாசனை அதே ப்ளோரில் (floor) இருக்கும் மத்த கம்பனியில வேலை செய்பவர்களின்  மூக்கை துளைத்ததால் அங்கு வேலை செய்யும் சாப்பாட்டு ராமன்களுக்கு தொந்தரவா இருக்குனு சொல்லி எடத்த  காலி பண்ண சொல்லிட்டாங்க. அப்புறம்  என்ன???  இப்படியே சில வருசம் பிஸ்கட்டும், காஞ்ச ரொட்டியும் (குப்ஸ்), பழமும் திண்டு லைப் ஓடிகிட்டு இருந்துச்சு.

இப்போ புதுசா  ஒரு மினி ரெஸ்டாரன்ட் (Bufiya) உருவாகி இருக்கு. இங்கு வச்சு  எதுவும் சமைக்க அனுமதி இல்லை அதனால அவங்க வெளியிலேருந்து கப்சா, பிரியாணி, சான்ட்விச், பிச்சா (pizza) போன்ற ஐட்டங்களை  செஞ்சு, கொண்டு வந்து இங்க விற்கிறாங்க.

 இது வெளியில விற்கும் விலையை விட ரெண்டு மடங்கு அதிகம் என்றாலும், இங்கிருக்கும் (சோம்பேறி) பாச்சுலர்களுக்கும் (bachelor) நேர  பற்றாக்  குறை உள்ளவங்களுக்கும் கிடைத்த வரப்ரசாதம்ன்னு தான் சொல்லனும் . நல்ல வேலை நமக்கு இந்த பிரச்னை இல்லப்பா...  தங்கமணி இருகிறதால!

சனி, 24 ஏப்ரல், 2010

மனம் கவர்ந்த கதை

சமீபத்தில் குடும்ப மலர் வார இதழில் ஒரு கதைப் படித்தேன், மனிதனின் சுயநலத்தைப் பற்றிதான். அடர்ந்த காடு வழியாக ஒரு மனிதன் சென்றான், அந்த வழியே இரைத் தேடி வந்த புலி அவனை பார்த்துவிடுகிறது. துண்ட காணோம் துணிய காணோம்னு மனிதன் ஓடறான், புலி விடவில்லை, துரத்தி கொண்டே போக, அவன் எப்டியோ அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிவிட்டன, ஆனாலும் புலிக்கு அவனை விடுவதாக ஐடியா இல்லை. மரத்தையே சுற்றிசுற்றி வருகிறது. பயத்தின் உச்சிக்கே சென்ற மனிதன் மரத்தை இறுக்கமாக பிடித்துகொண்டான். அப்போது தனக்கு பக்கத்தில் இருந்த கிளையில் எதோ அசைவதை உணர்ந்த  அவன் அங்கே ஒரு கரடி இருப்பதைக் கண்டு குலை நடுங்கி போனான். தன்னைப் பார்த்து மிரண்டு போன மனிதனைப் பார்த்து அந்த கரடி இரக்கம் கொள்கிறது. அவனைப் பார்த்து, மனிதா  என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று  சொன்னவுடன், அப்பாடன்னு ஒரு ஏக்க பெருமூச்சு விட்டான். கரடி சொன்னது, நீ உயிருக்கு பயந்து மரத்தில் ஏறும்போது என் காலில் கைவைதுவிட்டாய், அப்போதே நீ என்னிடம் அடைக்கலம் புகுந்துல்லாய், அதனால் நான் உன்னை எந்த நிலையிலும் கொள்ள மாட்டேன் என்று சொன்னது. அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பயோடு போய்டுச்சுன்னு பெருமூச்சு விட்டு மனிதன் கீழே குனிந்து பார்த்தான் புலி அங்கிருந்து நகர்வதாக இல்லை. அது நாசுக்கா கரடியிடம் சொன்னது  ஏ  கரடி நீயும் மிருகம், நானும் மிருகம் அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி ஒன்று  நீ அவனைச் சாப்பிடு இல்லையென்றால் கீழே தள்ளிவிடு நான் அவனைச் சாப்பிடுகிறேன் என்றது புலி. அதற்கு கரடி, அவன் என்னிடம் அடைகலம் தேடி வந்துள்ளான், நான் அவனை காப்பாற்றியே தீருவேன் என்றது. சிறிது நேரம் கழித்து மனம் தளராத புலி மனிதனிடம் வஞ்சகமாக மனிதனிடம் பேச்சு கொடுத்தது. மனிதா! எனக்கு பசி அதிகமாகிவிட்டது. எப்படியும் எனக்கு இரை வேண்டும், நீ கீழே வந்தால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டுவிடுவேன். ஆனால் நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் சொல்கிறேன், உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கி கொண்டு இருக்கிறது அதை நீ கீழே தள்ளி விடு நான் அதை சாப்பிட்டு விடுகிறேன், என் பசி தீர்ந்துவிடும் பிறகு நீ பிழைத்துவிடலாம் என்றது. தான் எப்டியும் உயரி பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன் தூங்கி கொண்டிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான், ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடிதுகொண்டது, கீழே விழாமல் தப்பியது. நடுங்கிப்போன மனிதன் அவனை அறியாமல் தன் கை கால் நடுங்கி கீழே அவனாகவே கீழே விழுந்து விடுவான் போல் இருந்தது. அப்போது கரடி நிதானமாக பேசியது. பயப்படாதே, இப்போதும் கூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாப படுகிறேன் தவிர, உன்னை பழி வாங்க நினைக்கவில்லை என்றது. நீ இப்படி செய்யலாம் என்று நான் எண்ணினேன் அதனால் முன்னேசிரிக்கையாக இருந்தேன் இப்போதும் கூட நான் உன்னை கொள்ள மாட்டேன் புலியிடம் தள்ளியும் விடமாட்டேன் என்றது. இதைக் கேட்டதும் மனிதன் தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தி, கண்ணீர் விட்டான் மனிதன்!!!
மிருகத்திடம் இருக்கும் உயர்ந்த குணம் மனிதர்களிடம் இன்று அறவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சுட்டி காட்டவே இந்த கதை...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அவசரம்....!

காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து அவசர அவரசமா குளிச்சிட்டு ஒரு கைல டிபன் பாக்ஸும் இன்னொரு கைல டீய வச்சு குடிசிகிட்டே சூவ மாட்டிகிட்டு ஆபிஸுக்கு கிளம்பி வந்தா ஒரே ட்ராபிக். எரிச்சலோட வண்டிய உருட்டிகிட்டே  எப்டியோ அடிச்சு புடிச்சு ஆபிஸ்ல வந்து சேர ஒரு கால் மணி நேரம் லேட் ஆகிருக்கும். அப்பாடான்னு  யார் கண்லயும் படாம   நைசா போய் சீட்ல உக்காந்து கொஞ்சம் ஹாயா  ஏசி காத்துல ரிலாக்ஸ் பண்ணிட்டு கம்ப்யுட்டர ஆன் பண்ணி ஏதாவது ஈமெயில் வந்து இருந்தால் பார்த்துட்டு அப்புறம் வேலைய ஸ்டார்ட் பண்ணுவோம்ன்னு இருந்தா, அப்டி பெருசா செய்றதுக்கு ஒண்ணுமே இல்ல, அட இதுக்கா இவ்ளோ அடிச்சி புடிச்சி வந்தோம்ன்னு நொந்துகிட்டே சரி ப்ளாக்லயாவது எதாச்சும் போடலாம்னு நெட் ஓபன் பண்ணலாம்னு பாத்தா, என்னோட சீட் நட்ட நடுல எல்லார் கண்ணுலையும் பட்ரமாரி வச்சுபுட்டனுவோ பாவி பய புள்ளைக. அதுனால நெட்ட கூட ப்ரீயா தொறந்து பார்க்க முடில. அதுனால எல்லாத்தையும் ஒரு பேபெர்ல எழுதி குட்டியா ஒரு விண்டோ ஓபன் பண்ணி கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டாச்சு. இந்த மாரி அனுபவம் யாருகாச்சும் இருந்தால் எப்டி நேரத்த வீனாக்குவீங்கனு பின்னூட்டத்துல சொல்லுங்க.... ரொம்ப மொக்கையா இருக்கோ??? ச்ச்சும்மா ஒரு ட்ரைதன்...

சனி, 10 ஏப்ரல், 2010

ஏமாற்று பேர்வழிகள்


இந்தியாவின்  இந்த +918326698100 நம்பரிலிருந்து இன்று எனக்கு ஒரு போன்  அழைப்பு வந்தது.  ஒரு பெண் மிக சரளமாக  நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசினால். Karma  Royal  Groupலிருந்து  பேசுவதாக சொன்னாள். அவர்கள் (GOA) கோவாவில் உள்ள பெரிய ஹோட்டல் என்றும், அங்கு சில சலுகைகள் வழங்குவதாகவும் ஒரு வார காலம் இலவசமாக  வி.ஐ.பி  வகுப்பில்  தங்குவதற்கான package  எனக்கு கிடைத்திருபதாகவும் சொன்னாள். அவள் மிக சரளமான ஆங்கிலத்தில் தேன்சிந்தும் வார்த்தைகளால்  பேசி கொண்டே மற்ற விவரங்களை எனது இமெயிலில் அனுப்புவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.  அவளுடைய ஆங்கில உச்சரிப்பில்  ஒரு முறையே  அந்த ஹோட்டல் பெயரை கேட்டு இருந்ததால், அதன் பெயர் எனக்கு  மறந்து போய்விட்டது. கொஞ்ச நேரம் யோசிச்சு  பார்த்தேன் பிடிபடவில்லை,  பிறகு  என் மொபைலை  எடுத்து அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, welcome  to Karma  Grand  Royal என்று Automatic பதில் வந்தது. எனது அழைப்பை துண்டித்து விட்டு, Googleலில் சென்று மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்   என்று அந்த நம்பரை type செய்தேன், அப்போது அதிர்ச்சியான சில விவரங்கள் தெரியவந்தது. இவர்கள் துபாய் போன்ற நாடுகளில் கிடைக்கபெறும் தகவல்களை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்.  இந்த பெயர் மற்றும் நம்பரிலிருந்து நிறைய பேருக்கு அழைப்பு வந்ததாகவும்,  இவர்கள் பொய்யர்கள் என்றும், இன்னும் (வெளி நாட்டிலிலிருந்து)  கோவாவுக்கு சுற்றுலா  வரும்  அப்பாவி மக்களை ஏமாற்றி மோசம் செய்வதுதான் இவர்களின் முழு நேர வலை என்றும், இவர்கள் பல பரிசுகள் மற்றும் Giftவௌசேர்(Voucher)கள் கொடுப்பதாக சொல்லி வசியமான சில வார்த்தைகளால்  அப்பாவிகளை  ஏமாற்றி, அவர்கள் வலையில் விழ வைத்து Resortக்கு கூட்டிச்சென்று பல நபர்களை அறிமுகம்  செய்து வைகிறார்கள், ஒவ்வருமாக    மூணு நாலு மணி நேரம் பேசி அவர்கள் கிளப்பில்  மெம்பராக  சேர சொல்கிறார்கள்,  அதெல்லாம் வேண்டாம் என்று நாம் ஒதுங்க முயன்று ஒதுங்கும்போது  வசியமான சில வார்த்தைகளை சொல்லி மடிய வைக்க முயற்சிக்கின்றார்கள், வேண்டாம், நான் போகிறேன் எனக்கு வாக்களித்த Gift வௌசெரை தாருங்கள் என்று சொன்னால், நாங்கள் அப்படி  ஒன்றும்  வாக்களிக்கவில்லை   என்று  சொல்கிறார்கள்.  எப்படியாவது அவர்கள் கிளப்பில் மெம்பராக்கிவிட   முயற்சிக்கின்றார்கள்.  ஒத்துவரவில்லை என்றல் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள்.  எனவே இவர்களைப்  பற்றி Consumer Complaintஇல்  என்ன  சொல்லப்படுகிறது   என்று பாருங்கள். இது போன்ற அழைப்பு உங்களுக்கும் வந்தால் அவர்களிடம்  தொடர்ந்து எதுவும் பேசாமல் உடனே அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
Karma Royal Resorts
Posted: 2009-06-12 by R K Arora Send email
Cheating innocent visitors coming to Goa
By this piece of complaint I want to warn unsuspected travellers who waste their precious holiday time and are being cheated by this so called cheat comapny called Karma Royal Group.

The modus operandi is that travellers moving aroung Goa on Holidays are approached by their agents (whom they themself call kidnapper) giving lure of prize vouchers containg false promises on free stay, ipod, restaurant vounchers, boating trips etc. They convince the unsuspected travellers that they are just promoting their resorts and want to publicise the same by providing free stays etc. and would like to take them to show the resort .
Once the traveller who has come to Goa on holiday by spending money on travel and hotels etc. falls into their trap of free stay and other instant prizes to be given and agrees to come along with them, he is picked by the kidnapper and taken to their resort.
Once you are there, without any consideration their actors just start playing drama introducing different persons and you are made to sit with your entire family for listening their non-stop commentary on resorts, time share plans, how you are wasting your life without joing them and other type of brain washing exercises. After 2-3 hours of non stop commentaries by different digfferent persons they start presurrising you to agree to take their membership which costs 3-4 lakhs.
The real colous appear when you refuse to take that bullshit and asks for the prizes promised. Than comes some bouncer type persons in picture who would inform you that you are not entitled for any of the instant prizes and you should just take a voucher, which you obviously would not be able to use and leave.
If you demand your promised prize they imkeditaely start misbehaving.
By the time you learn your mistake you had already lost your one day for which you had paid money to your hotel and you had come so far away from your home to enjoy holidays.
Despite being aware of such cheats I myself became their victim when they assured me that I should just listen to their resort promotion for one hour and I would be provided free stay immediately after that, than and there.
But when I demanded the assured prize I was told restaurent is closed, boat trip timings are over, free stay only with 2 months advance booking and like that. That bugger became so rude and abusive when I started protesting.
So beware of Karma Royal Group and its fraudsters moving around Goa.
You can imagine what kind of service this CHEAT KARMA ROYAL GROUP might be providing to its members.

Source: http://www.consumercomplaints.in/complaints/karma-royal-resorts-c197241/page/1.html#c440008

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அலெர்ட்!!!

நானும் தங்கமணியும் வாராவாரம் கலாச்சார மையத்துக்கு போவது வழக்கம். அங்கு  நண்பர் ஒருவர் தன் மகளுக்கு நடந்த சம்பவம் பற்றி சொன்னார். அவரோட பொண்ணு  ஒரு காயின வாயில வச்சி விளையாடிக்கிட்டு இருந்திருக்கு,  பின்னால் தன்  தங்கை வந்து எதேச்சையாக கையை தட்ட, அந்த  காயின் வாய் உள்ள போயிடுச்சு. நண்பர் பயந்து போய் உடனே  டாக்டர்கிட்ட போனா, அவர் பயப்பட வேணாம் வயத்துகுள்ளதான் இருக்கு. கக்கா... போனா எல்லாம் சரியாயிடும்-னு சொல்லிட்டார்.
 
குட்டீஸ் வச்சி இருக்கவங்க ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். அவங்களுக்கு சொன்னாலும் புரியாது, நமக்கும் அவங்கள மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுல  SO PREVENTION IS BETTER THAN CURE
 அதுக்காக எனக்கு தெரிஞ்ச  சில டிப்ஸ் இதோ...

1, நாம ரொம்ப புத்திசாலி தனமா கெரோசின், ஆசிட் மாதிரி டேன்ஜரஸ் ஐட்டத் தைய்யலாம் தண்ணி பாட்டில்ல ஊத்தி வச்சிருப்போம். அத உயரமான எடத்துல வைக்கணும். கூடவே அதோட பெயர் எழுதி வைக்கலாம்.


2, அத மாதிரி நாம சோம்பேறித்தனத்துக்காக உட்கார்ந்துகிட்டே லைட் போட்ற மாதிரி, படுத்துக்கிட்டே அயன் பண்ற மாதிரி  கைக்கு எட்ர மாதிரி ப்ளக் பாயிண்ட்ஸ் வச்சிருப்போம். அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. இருந்தாலும் குட்டீஸ் வளர்ற வரைக்கும் அலர்ட்டா இருக்கனும் அப்டி இல்லேன யூஸ் ஆகாத பிளக் பாயிண்டுக்கு tape ஒட்டி வைக்கலாம் அல்லது மூடி போடலாம்.  அது பக்கம் போக விடாம ஏதாவது திங்க்ஸ் போட்டு அடைச்சிடலாம் (அனுபவம்)



3, கத்தி, அரிவாள்மனை இதைலாம் குட்டீஸ் கை பட்ற எடத்துல வைக்க கூடாது. அதுமட்டும் இல்லாம ஊக்கு, பட்டன் காயின் மாதிரி முழுங்குற மாறி திங்க்சலாம் அங்க அங்க போட கூடாது.


4, இன்னொரு முக்கியமான விஷயம் இப்ப வெயிட் லெஸ் ஸ்டூல், சேர்லாம் வந்துடுச்சு. குட்டீஸ் ஈஸியா தூக்கிட்றாங்க அத தூக்கிட்டு போய் ஜன்னல எட்டி பாக்கறது, வாஷிங் மெசின எட்டி பாக்கறது, ஸ்டவ் பக்கதுல வந்து நிக்கறது. இந்த மாதிரி டேன்ஜரஸ் வேலைலாம் செய்றாங்க .ஒன்னு ஸ்டூல எங்கயாவது எடுக்க முடியாம போடுங்க .இல்லேனா குட்டிஸ கவனமா பாத்துக்குங்க.













டிஸ்கி: என் குட்டி பொண்ணு சுட்டி ஆயிட்டதால இந்த பதிவ எனக்கே டெடிகேட் பண்ணிக்றேன்

வேற ஏதாவது டிப்ஸ் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க... தாங்க முடியல...