அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

புதன், 28 அக்டோபர், 2009

ஹஜ்ஜுடைய காலம்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحيمْ
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ 197

ஹஜ் (ஜூக்குரிய காலம்! தெரிந்த மாதங்களாகும் அம்மாதங்களில் ஹஜ்iஐ (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَة
ஹஜ்ஜூடைய மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜூடைய கடமையை இறைவன் இறுதி கடமையாக்கினான். காரணம் அதற்கு முந்தைய கடமைகளாகிய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்றவைகளை முறைப்படுத்தி செய்து விட்டு இறுதியாக அதுவும் வசதியும், உடல் ஆரோக்கியமும் பெற்றிருந்தால் ஹஜ் என்ற இறுதி கடமையை செய்து இறை திருப்தியை அடைந்து கொள்ள இறைவன் உத்தரவிட்டான். வசதியும், ஆரோக்கியமும் இருந்து ஒருவர் ஹஜ் செய்ய மறுத்தால் மட்டுமே அதனால் அல்லாஹ்வுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை என்றும் கூறினான் இறுதி கடமையாகிய ஹஜ்ஜை செய்யச் செல்வோர் அதற்கு முந்தைய கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற கடமைகளை அழகுறச் செய்து இறுதியாக ஹஜ்ஜை செய்தால் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளை இனிதே நிறைவேற்றி இறை திருப்தியை அடைந்து கொள்ளலாம். அதுவே இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்ற அந்தஸ்தை அடையும்.
இறுதி வடிவம் பெறும் எந்த ஒன்றும் ஒழுங்குடன் அமைய வேண்டுமெனில் அதற்கு முந்தையதை சீராக அமைத்திடல் வேண்டும் இல்லை என்றால் அது இறுதி வடிவம் கிடைக்காது என்பதுடன் அது விழலுக்கு இரைத்த நீர் போல் ஆகும். ஒரு கட்டிடத்தை எடுத்துக் கொள்வோம் கட்டிடத்திற்கு இறுதி வடிவம் கிடைப்பதற்கு கட்டிடம் எழுப்பப்படவிருக்கின்ற தரையின் ஈரத் தன்மைக்கு தகுந்தாற்போல் அஸ்த்திவாரமிட்டு அதன் மேல் தூண்கள் நிருவப் பட்டப் பின்னர் கற்களை சீராக அமைத்தால் கட்டிடம் அழுகுடனும், அழுத்தத்துடனும் இறுதி வடிவம் பெறும்.இஸ்லாம் என்ற கட்டிடம் ஐந்து தூண்களின் மேல் (கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்) நிலை பெற்றிருப்பதாக பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் புகாரி, முஸ்லீம். இதில் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற தூண்களை அகற்றி விட்டு அல்லது அவற்றை சீரில்லாமல் ஏற்றத் தாழ்வுடன் அமைத்து விட்டு ஹஜ் என்ற தூணை மட்டும் முறையாக நிருவினால் அதன் நிலமை என்னவாக இருக்கும்? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஐம்பெரும் தூண்களைக் கொண்டு நிருவிக் கொடுத்த அழகிய கட்டிடத்தை முஸ்லிம் சமுதாயத்தினரே சிதைக்க முயலளாமா? சிந்திப்போம் சீர்பெறுவோம். இஸ்லாத்தின் இறுதிக் கடமையை நிறைவேற்றச் செல்ல விரும்பும் சகோதரர்களே! அதற்கு முந்தைய நான்கு கடமைகளை முழுமைப் படுத்தி விட்டீர்களா? கலிமா இலகுவாக சொல்லி இருப்போம் கலிமாவுடைய பொருளணர்ந்து அதில் நிலைத்திருந்தோமா? என்று ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை என்ற இறை வழிப்பாட்டை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தந்த வழியில் நடைமுறைப் படுத்தினீர்களா? என்பதை ஒரு முறை தங்களைத் தாங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழுகை எவரிடத்தில் இருக்குமோ அவரே வெற்றிப் பேற்றோர் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். 23:1,2

எங்கே வெற்றிப் பெறுவோம் ?
மறு உலகில் ! மறுமை நாளின் போது அடியானின் செயல்களில் முதலாவதாக கணக்கு கேட்கப்படுவது அவரது தொழுகைப் பற்றியே, அது முறையாக இருந்தால் அவர் வெற்றிப் பெற்று கரை சேர்ந்து விடுவார், அது சீர் கெட்டிருந்தால் நஷ்டமும் கைசேதமும் உடையவராக ஆகி விடுகின்றார். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல்: திர்மிதி, இப்னுமாஜா.
தொழுகை என்ற இறைவனுக்கு தூய்மையான சிந்தனையுடன் செலுத்துகின்ற வழிப்பாடின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விட்டால் அது சீர்கெட்டு அதனால் மறுமையில் வெற்றிப் பெற முடியாமல் போவதுடன் அதற்கடுத்த நிலையில் வரும் அனைத்து வழிப்பாடுகளும் அதே நிலையில் சீர்கெட்டு தோல்வியைத் தழுவும் என்பதை மேற்கானும் நபிமொழி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள் அப்போது பின்வருமாறு கூறினார்கள்: எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, அதனால் ஈடேற்றம் பெற முடியாது. (முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள். தொழுகை என்ற இறைவனுக்கு செலுத்துகின்ற வழிப்பாடு அறவே பேணப்படாமல் இருந்தால் அல்லது அது முறையற்று இருந்தால் அல்லது பிறருக்கு காட்டுவதற்காக அமைந்திருந்தால் அது அவர்களுக்கு மறுமையில் பெரும் கை சேதத்தை ஏற்படுத்தும் தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான், அவர்கள் பிறருக்குக் காட்டு வதற்காகத் தொழுகின்றனர் திருக்குர்ஆன் 107:4,5,6. கவனக் குறைவாக தொழும் தொழுகையாளிகளைப் பார்த்து அவர்களுடைய தொழுகையால் அவர்களுக்குக் கேடு தான் என்று ஏகஇறைவன் தன் திருமறையில் கோபமாக ஏன் கூறுகின்றான்?
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தராத வழியில் முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழியில் தொழுகையை அமைத்துக் கொள்வதும் இறைவனுக்கு செலுத்தும் வழிபாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளாமல் தொழுகைக்கான அழைப்பு விடுக்;கப் பட்;டப்பின்னரும் விரைந்து செல்லாமல் அலச்சியப் படுத்துவதும் தொழுகையின் வரிசையில் சோம்பலுடன் நிற்பதும், பிறர் பார்த்து இவர் பக்தியாளர் என்றுக் கூறுவதற்காக தனது தொழுகையை பிரத்தியேகமாக அமைத்துக் கொள்வது போன்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் ஹஜ்ஜூக்கு முன்னால் பேணப்பட வேண்டிய தொழுகை மனிதரிடத்தில் முறையாக இல்லை என்றால் அதற்கு அடுத்ததாக வரக்கூடிய அனைத்து வழிப்பாடுகளும் செல்லத் தகாததாக ஆகிவிடும். தொழுகை என்ற வழிப்பாட்டை உலகில் வாழும் போது விட்டு விட்டு மறுஉலக விசாரணையின் போது ஹஜ் செய்திருக்கிறேன் அதனால் என்னை சொர்க்கத்தில் சேர்த்து விடு என்று எவரும் இறைவனிடம் கூறமுடியாது என்பதுடன் அதற்கு முன் முறையாகப் பேண வேண்டியத் தொழுகையை விட்டதற்காக''ஸக்கர்' என்று சொல்லக் கூடிய கொழுந்து விட்டு எரியும் நரகிற்குள் புக நேரிடும். ...குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள், நாங்கள் தொழுவோராகவும் ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக்கூறுவார்கள், வீணில் மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம், தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம், உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 70:41 முதல் 47 வரை. மேற்கானும் திருமறை வசனத்தில் நரகிற்குள் நுழையச் செய்ததற்கு எது காரணமாக இருந்தது என்று சொர்க்க வாசிகளால் நரகவாசிகளைப் பார்த்து கேட்கப்படும் பொழுது ஹஜ் செய்யவில்லை என்று எவரும் சொல்ல மாட்டார்கள் தொழ வில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் துவண்டு வாடி வதங்கிய ஏழைகளுக்கு எங்களுடைய பொருளாதாரத்திலிருந்து சிலவற்றை எடுத்துக் கொடுத்து உதவ முன் வரவில்லை, மறுமையை மறந்து, உலகத்தை சொர்க்கபுரியாக்கி வாழ்ந்தவர்களைப் பார்த்து எங்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டோம், மரணம் தொண்டைக் குழியை அடையும் வரையில் சுகபோகத்தில் திளைத்தோம். என்றுக் கூறுவார்களாம். உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றதும் தமது ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! யார் தன் தொழுகையைப் பேணுகின்றாரோ - அதனைக் கண்காணித்தவண்ணம் இருப்பாரோ அவர் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பார். எவர் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றாரோ அவர் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவராகவே இருப்பார்.(மிஷ்காத்) உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற நற்சான்றிதழை பெருமானார்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள் அந்தளவுக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உமர்(ரலி) அவர்கள் மார்க்க ஞானம் மிக்கவர்களாகவும், இறையச்சமுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள் இறையச்சமுடைய உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைந்து மக்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதலில் மக்களுக்கு இட்ட உத்தரவு தொழுகை பற்றியதாக இருந்ததுவே காரணம். ஹஜ்ஜூக்கு செல்ல விருக்கும் முஸ்லிம் சகோதரர்களே! ஹஜ்ஜூடைய வழிப்;பாட்டுக்கு முந்தைய முக்கியமான வழிப்பாடாகிய தொழுகையை முறைப்படி தொழுதீர்களா?அவ்வாறு முறைப் படுத்தி உள்ளச்சத்துடன் தொழுதிருக்க ல்லை என்றால் இப்பொழுது நீங்கள் ஹஜ்ஜூடைய மாதத்தில் இருக்கின்றீர்கள் இப்பொழுதே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிக் காட்டிய வழியில் தொழுகையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஹஜ்ஜூடைய மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களாகும் இந்த மூன்று மாதங்களில் (ஹஜ்ஜூக்குத்) தேவையானவற்றை திரட்டிக் கொள்ளுங்கள் ! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள். 2:197 என்று இறைவன் கூறுகிறான். ஹஜ்ஜூடைய மாதங்களில் இறையச்சத்தை திரட்டுங்கள் இறைவனை அஞ்சுங்கள் ஹாஜி என்ற பட்டத்தைப் பெறுவதற்கான எண்ணத்தில் ஹஜ்ஜூக்கு இறங்காதீர்கள் ஹஜ் உருவாவதற்கு காரணியாக இருந்த தியாகச் செம்மல்களின் வரலாற்றை படித்தீர்கள் என்றால் ஹாஜி என்ற பட்டம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப் போதுமானது என்ற முடிவுக்கு வருவீர்கள் இதுவே இறையச்சத்தை ஏற்படுத்தும். இனி ஹஜ்ஜூக்கு முந்தைய கடமையாகிய ஜகாத், (தான தருமம்) முறையாக அமைந்திருந்ததா ? என்று அல்லாஹ் நாடினால் எழுதுவோம்....
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104

சனி, 24 அக்டோபர், 2009

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் ஈ பாஸ்போர்ட் திட்டம்

ஈ பாஸ்போர்ட் சேவையும் பாஸ்போர்ட் சேவா திட்டத்தையும் அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. ஈ - பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் பாஸ்போர்ட்டைடி ஜிட்டல் மயமாக்க உள்ளது இந்திய அரசு. அடுத்த வருடத்தில் 8 லட்சம் E-passport வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவா மூலம் தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்க முடியும் என அரசு நம்புகிறது. Build-Operate-Transfer (BOT) திட்டத்தின் கீழ் , டாட்டா (Tata Consultancy Services)நிறுவனத்தால்பாஸ்போர்ட் சேவா திட்டம் தனது சேவைகளை அளிக்க உள்ளது.இதன் மூலம் பொது மக்களுக்கு சரியான நேரத்தில், வெளிப்படையான, வசதியான முறையில்இந்த சேவைகள் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவு 207.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய்.10மில்லியன். இந்த ஈ- பாஸ்போர்ட் மூலம், தானியங்கி அடையாள உறுதி செய்தாலும் (automatic identity verification),வேகமான இமிக்ரேஷன் சோதனைகளும்,  ஆற்றல் மிக்க எல்லை பாதுகாப்புகளும் செய்து கொள்ளலாம். ஈ- பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட்டின் பின்புறத்தில், ஒரு சிப் இணைக்கப்பட்டிருக்கும். இதில்பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டுள்ள தகவல்கள் மின்னணு தகவல்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.இதன் மூலம் பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ, அச்சிடப்பட்ட தகவல்களுக்கும், மின்னணுதகவல்களுக்கும் வேறுபாடு இருந்தாலோ,  தேவையான் நடவடிக்கைகளை எடுக்க முடியும். The International Civil Aviation Organisation (ICAO), ஈ-பாஸ்போர்ட்டுகளுக்கான விதிகளை வகுத்துள்ளது.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி


கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது. 60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.
இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர். இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர். அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது. எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது. இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2009

மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்? *அவசியம் படியுங்கள் இதை!

ஹலோ...'என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "டியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார். இது அந்தஸ்தின் அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்? மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார்: மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர். உண்மையில் மூளைக்கும், மொபைல் போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்த விதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம். மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது. அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும்.  மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம். பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது. தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்

புதன், 14 அக்டோபர், 2009

மனிதன் ஓதும் மாயமந்திரம்

பணம் பணம் பணம் -இதுவே தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம் பணம் இல்லையேல் அவன் பிணம் -இது பழமொழிக்காக சொல்லித்திறியும் சாத்தான் வேதம் ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும் ஓயாத ஓட்டம் பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க வரிந்துகட்டிகொண்டு ஓட்டம் பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும் சில பச்சோந்திகளின் கூட்டம் பாசங்கள் கூட பணத்தின் முன்னே பணிந்துபோகும் அவலம்பணத்திற்காக பாசத்தைக்கூட விர்த்துக்கொள்ளும் இன்றைய காலம் பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி பணத்தின் முன்னே பாசம் சரணாகதி பணம் வந்தபின்னே பாசம் சந்துபோவதோ விதி இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான்- அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான் இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான். காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா? மனிதர்களின் பாசம்தான் புரியுமா? மனிதர்களுக்கு பணம் அவசியம் அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்பவந்துவிடும் -ஆனால் பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள மனமல்லவா நம்மைவிட்டுப்போகும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்குபணத்தின்மேல் உள்ள பக்தியை சற்று ஒதிக்கி அதன் இடைவெளியில் பாசத்தை சொருகு பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார் தன்னை உணர்வதோடு பிறறையும் உணரும்போதுந்ததிற்கான பலனை இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய்...