அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

வியாழன், 20 மே, 2010

டீ....

உலகில்  அதிகமான மக்கள் நான் விரும்பி குடிக்கிறததான் விரும்பி குடிக்கிறாங்கலாம் அதான்பா டீ யை  தான் சொல்றேன். அதை பற்றிச் சில சுவையான தகவல்கள்

  • இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் குணம் டீக்கு உண்டாம்.

  • தென்னிந்தியாவில் குன்னூர், இடுக்கி வயநாடு, வால்பாறை, மூணார், கூடலூர் பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயம் தான் பிரதான தொழில்.

  • டீ தூளின் எடையை கூட்ட கலப்படம் செய்யிறாங்களாம் அதுக்கு அவங்க புட் கலர் சேர்கிறாங்கலாம். புட் கலரா இருந்தாலும் சட்ட விரோதமானதும், உடல்நலத்துக்கும் நல்லதில்லையாம்.

  • இந்த கலப்பட டீயைக் கண்டு பிடிக்க ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கொஞ்சம் போட்டு பார்க்கணுமாம். தண்ணீரில் கலர் பட்டிபட்டியாக இறங்கினால் அது கலப்படத் தேயிலை. நிறம் மாறாவிட்டால் கலப்படம் இல்லாதது. அதே போல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மேல் ஒரு சிட்டிகை டீத்துளை பரப்பி அதன் மேல் நான்கைந்து சொட்டு தண்ணீரை விடணுமாம் பேப்பரின் நிறம் மாறினால் அது கலப்படம்.
ஒவ்வொரு ஊர் டீயும் ஒவ்வொரு கலர்.










நீலகிரி டீ ஆரஞ்சு கலர்








கென்யா டீ அடர் சிவப்பு




 







அஸ்ஸாம் டீ டார்க் பிரவுன்









டார்ஜிலிங் டீ தாமிர நிறம்

  • நீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து அதில் டீத்தூளை போட்டு 2 நிமிடம் கழித்து வடிகட்டி அப்படியே ப்ளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ குடிக்கணுமாம்.இதுதான் சரியான முறை.பாலிலோ, நீரிலோ டீத்தூளை போட்டு அது நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து குடித்தால் டீயின் ஒரிஜினல் சுவையை உணர முடியாதாம்

  • எல்லாத்துக்கும் மேல காஸ்ட்லி டீன்னு வேற இருக்குதாம். சில்வர் டீ, ஒயிட் டீ, பிராஸ் டீ ,...... இதெல்லாம்  ஹைகிளாஸ் மக்கள் விரும்பி குடிக்கிற டீயாம்.இதுல என்ன ஸ்பெஷல்னா சாதாரன டீ தூளில் 2 இலைகள் 1 மொட்டு சேர்த்து பறிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு தயாரிக்கபட்டால். இந்த காஸ்ட்லி டீ க்கு வெறும் மொட்டுகளை மட்டும் பறித்து,கைகளாலேயே கசக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தி தயாரிக்க படுதாம். 1கிலோ தேயிலையின் விலையே ஆயிரத்தை தாண்டிதானாம். 

11 கருத்துகள்:

  1. அடங்கப்பா, டீயிலேயே ஒரு பொரிய ஆராய்ச்சி போல.
    என் பதிவில் உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்து இருந்தேன் வந்து பெற்று கொள்ளுங்கள்.
    அப்ப கமென்ட் போட முடியல.

    பதிலளிநீக்கு
  2. http://allinalljaleela.blogspot.com/2010/05/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜலீலா அக்கா.அவார்ட் தந்து ஊக்கமளித்ததற்கும்,வருகைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. Superb Teaps!! நம்ம ஊரு இஞ்சி டீ எப்படி போடுவதுன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப ரசிச்சி ருசிச்சி குடித்தோம். சாரி...... படித்தோம்.

    பதிலளிநீக்கு
  6. //SUFFIX சொன்னது… Superb Teaps!! நம்ம ஊரு இஞ்சி டீ எப்படி போடுவதுன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)\\

    இவ்ளோ லேட்டா டீ போடறதுக்கு மன்னிக்கவும், வேலை பளு காரணமாக தான் போடா முடில.

    இதோ டீ எக்ஸ்பெர்ட் நெய்னாவின் நம்ம ஊர் Teaps!
    இஞ்சியை வெயிலெ காய‌ வ‌ச்சு அம்மியில் (முன்னாடி அம்மி, இப்பொ வகை, வகையான மிக்ஸி இல்லாட்டி கிரைண்டர்கள்) த‌ட்டி பொடி செய்து ஒரு சின்ன‌ ட‌ப்பாவுலெ போட்டு அடைச்சி வ‌ச்சி அதை ந‌ன்றாக‌ கொதித்த‌ த‌ண்ணீரில் கொஞ்ச‌ம் போட்டு பிற‌கு டீத்தூள் தேவைக்கு த‌குந்த‌ ப‌டி போட்டி அத்துட‌ன் பிரிய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஏல‌க்காய் ஒன்னு, ரெண்டு போட்டு பிற‌கு பாலை கொதிக்கும் த‌ண்ணீரில் ந‌ன்றாக‌ பொங்கி வ‌ரும் வ‌ரை கொதிக்க‌ வைத்து ப‌ரிமாற‌ப்ப‌டும் டீயை குடித்தால் உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை சும்மா ஜிம்முண்டு விறு,விறுப்பா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. \\Abu Nadeem சொன்னது…
    ரொம்ப ரசிச்சி ருசிச்சி குடித்தோம். சாரி...... படித்தோம்//.


    டீய நல்லா (குடிச்சி) படிச்சி என்ஜாய் பண்ணினதுக்கு தேங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  8. \\பெயரில்லா சொன்னது…
    useful tips//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி... Mr.? பெயரில்லா...

    பதிலளிநீக்கு
  9. வாங்க மச்சான் khobarku வாங்க practicala சொல்லி காண்பிக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  10. டீக்குறிப்புகள் சுவையாயிருக்கின்றன.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து